பிறப்பும் வருகையும்
காலங்கள் கடக்கும்
கோலங்கள் மாறும்
கோலங்கள் மாறும்
மாறாத உண்மை அவர் பிறப்பே
எதிர்பார்க்கும் உண்மை அவர் வருகையே
Chorus
மானிடம் மீட்டிட வந்தார் - இயேசு
மானிட மகவாய் தவழ்ந்தார்
உலகை விசாரிக்க விரைவார் - வானில்
தேவ குமாரனாய் திகழ்வார்
தூதர்கள் பாட, ஆயர்கள் கூட
தொழுவத்தின் தாழ்மையில் பிறந்தார் - அன்று
மானிட ஏழ்மையில் பிறந்தார்
இனி
எக்காளம் முழங்க, முழங்கால்கள் பணிய
ராஜாதி ராஜனாய் வருவார் - எல்லா
கண்களும் காண அவர் வருவார்... (Chorus)
சிலுவையில் மரிக்க, பாவங்கள் போக்க
மரணத்தை வெல்ல அவர் வந்தார் - அன்று
கிருபையை அருமையாய் தந்தார்
இனி
தீமையினின்று நன்மையைத் தேர்ந்து
வேறு பிரித்திட வருவார் - உலகில்
நீதி நிலைத்திட அருள்வார்.. (Chorus)
Comments
Post a Comment