நெஞ்சமெங்குமே நேசம் | Nenjamengume Nesam

நம்மிடையே உறவாடலா
நாள்தோறும் புகழ் பாடலா 
என் வாழ்வில் உம் வழி காணவா 
ஈற்றில் நாம் மகிழ்ந்தாடவா 

நெஞ்சமெங்குமே நேசம் 
தீரா சந்தோஷம் 
தஞ்சமென்றுமே உம் பாதம் 
இயேசுவே உம் நாமம் 

தவறிய பொழுதிலே 
விழுந்த இடத்திலே 
தூக்கிவிட யாருமின்றி மடிந்து போனேனே 
பெலன் தர யாருமின்றி தளர்ந்து போனேனே
என்னைத் தேடி வந்து தூக்கி 
உம் சொந்தம் என்றீரே 
என்னைத் தூக்கி அணைத்துத் தேற்றி 
பந்த பாசம் என்றீரே 
இன்னும் இன்னும் உம்மை 
நாடித்தேடும் என்னை 
சேர்த்துக்கொள்வீரே 
முன்னும் பின்னும் என்னை 
முற்றுமறிந்து நீர் 
காத்துக்கொள்வீரே ...(நெஞ்சமெங்குமே)


வாழ்வின் முடிவிலே 
மங்கிடும் ஒளியிலே 
இருளின் பாரம் கண்டு பயந்தே போவேனே 
கைப்பிடிக்க யாருமின்றி தனித்தே போவேனே 
என் கால்களுக்கு தீபமாய் 
நீர் வருவீரே 
என் பாதைக்கு வெளிச்சமாய் 
நீர் இணைவீரே 
இன்னும் இன்னும் உம்மை 
நாடித்தேடும் என்னை 
சேர்த்துக்கொள்வீரே 
முன்னும் பின்னும் என்னை 
முற்றுமறிந்து நீர் 
காத்துக்கொள்வீரே ...(நெஞ்சமெங்குமே)



Written and Composed on 12 November 2020
London

Comments

Popular Posts