அன்பாலே இணைத்தீரையா
அன்பாலே இணைத்தீரையா – இவர்களை
அன்பாலே இணைத்தீரையா
காலங்கள் எல்லாம் கூடவே இருந்து
கண்மணிபோல காப்பீர் ஐயா
திருமண வாழ்வின் மேன்மையை உணர்ந்திட
பரிசுத்தமாய் தம்மை என்றென்றும் காத்திட
குடும்பமாய் சேர்த்தீர் உம்மில் வளர்ந்திட
பட்சமாய்க் காப்பீர் சாட்சி பகிர்ந்திட
.. இவர்களை இணைத்தீரையா
உம் அன்பாலே இணைத்தீரையா
வாழ்விலும் தாழ்விலும்
உம்மையே நோக்கிட
உமதன்பின் அரவணைப்பில்
அனுதினம் வாழ்ந்திட
கனி தரும் மரமாய் உம்மில்
நிலைத்திட
வாழ்வில் என்றென்றும் உம்
வழி சென்றிட
.. இவர்களை இணைத்தீரையா
உம் அன்பாலே இணைத்தீரையா
x
Comments
Post a Comment