கடந்து வந்த நாட்கள் எல்லாம்

கடந்து வந்த நாட்கள் எல்லாம் காத்த தெய்வமே 

புதிய வாழ்வில் என்னோடு இணையும் தேவனே 


    கண்ணீர் துடைத்து என்னை அணைத்து 

    காயங்கள் ஆற்றி என்னைத் தேற்றி 

    காலங்கள் மாறி கோலங்கள் மாற 

    வாழ்கின்றேன் உமக்காக     

    நீரின்றி வாழ்வில்லை எந்தன் நேசரே - எனக்கு 

    நீரின்றி யாருண்டு பூவுலகிலே 


வாழ்விலும் தாழ்விலும் உம்மை நோக்குவேன் இயேசுவே 

எந்நாளும் உம்மிலே வளர்ந்திட வாழ்கிறேன் நாதரே 

துன்பத்தின் வேளையிலே கண்ணீரின் பாதையிலே 

உம்மையே நோக்கிடுவேன் - உம் 

மார்பிலே சாய்ந்திடுவேன்...

நீரின்றி வாழ்வில்லை எந்தன் நேசரே - எனக்கு 

நீரின்றி யாருண்டு பூவுலகிலே


உள்ளங்கைகளில் வரைந்தவரே 

கண்மணிபோல காப்பவரே 

தாயைப்போல் தேற்றினீர் 

தந்தைபோல் கவனித்தீர்

உம்மிலே வாழ்ந்திடுவேன் - உம் 

மார்பிலே சாய்ந்திடுவேன்...

நீரின்றி வாழ்வில்லை எந்தன் நேசரே - எனக்கு 

நீரின்றி யாருண்டு பூவுலகிலே

Comments

Popular Posts