உம் நேசக் கரங்களால் | Um Nesa Karangalaal
உம் நேசக் கரங்களால்
அணைத்துக் கொண்டீரே
உம் பாசக் கரங்களால் - என்னை
சுமந்து வந்தீரே
நெருக்கத்தின் பாதையில்
தவறிய வேளையில்
மனம் நொந்த நேரத்தில்
கதறிய ஜாமத்தில்
மகிமை தந்தீரே இழந்து போனேனே
ஒரு கிரீடம் தந்தீரே தரம் இழந்தேனே
ஆனாலும் உம் கிருபை மாறாதல்லோ
இந்த ஏழையையும் அன்பாய் ஏற்பீரல்லோ
விலகிச் சென்றேனே தேடி வந்தீரே
உம்மை மறந்து போனேனே நாடி வந்தீரே
எந்நாளும் உம் அன்பு மாறாதல்லோ
இந்த ஏழையையும் அன்பாய் ஏற்பீரல்லோ
தள்ளப்பட்டேனே தெரிந்தெடுத்தீரே- மனம்
உடைக்கப்பட்டேனே உருமாற்றினீரே
வாழ்நாளெல்லாம் நீர் என் துணையல்லோ
இந்த ஏழையையும் அன்பாய் ஏற்பீரல்லோ
Comments
Post a Comment