உனக்காக உலகில் வந்து

உனக்காக உலகில் வந்து

உன் சுமையை தான் சுமந்து

உன்னை வாழவைக்கும் இயேசுவே

 

அவருன்னை

ஆதியும் அந்தமுமானவராய்

உன்னை என்றென்றும் காத்திடுவார் //

 

உன்னை நினைத்தாரே தேடி வந்தாரே //

 

பெத்தலை நகரில் சத்திர ஓரம்

மானிடனாக உதித்தாரே //

இத்தரை மீதினில் இரட்சகராக

மானிட கோலம் கொண்டாரே //

உலகை மீட்டிடவே கடவுள் மனிதனானாரே //

                                        உன்னை....

 

கடவுளின் வார்த்தை நிறைவேறிடவே

தன்னுயிர் தந்து மீட்டாரே

சொல்லிலும் செயலிலும் வல்லவராக

அன்புடன் எம்மை காத்தாரே

உன்னை மீட்டிடவே கடவுள் மனிதனானாரே //

                                        உன்னை....

Comments

Popular Posts