உனக்காக உலகில் வந்து
உனக்காக உலகில் வந்து
உன் சுமையை தான் சுமந்து
உன்னை வாழவைக்கும் இயேசுவே
அவருன்னை
ஆதியும் அந்தமுமானவராய்
உன்னை என்றென்றும் காத்திடுவார் //
உன்னை நினைத்தாரே தேடி வந்தாரே //
பெத்தலை நகரில் சத்திர ஓரம்
மானிடனாக உதித்தாரே //
இத்தரை மீதினில் இரட்சகராக
மானிட கோலம் கொண்டாரே //
உலகை மீட்டிடவே கடவுள்
மனிதனானாரே //
உன்னை....
கடவுளின் வார்த்தை நிறைவேறிடவே
தன்னுயிர் தந்து மீட்டாரே
சொல்லிலும் செயலிலும் வல்லவராக
அன்புடன் எம்மை காத்தாரே
உன்னை மீட்டிடவே
கடவுள் மனிதனானாரே //
உன்னை....
Comments
Post a Comment