மகிமையான தொழுவம்
மகிமையான தொழுவம்
மன்னவர் பிறந்த தொழுவம்
மகிமையான தொழுவம்
ஆண்டவர் பிறந்த தொழுவம்
காரிருள் நீக்கிடவே
பாவத்தைப் போக்கிடவே
உலகில் வந்தவர் தொழுவம்
ராஜாதி ராஜனின் தொழுவம்
மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மண்ணில் உதித்த தொழுவம்
சீருஷ்டிப்பின் தேவனன்று
கண் விழித்த தொழுவம்
வரலாறு காணாத
புதுமை நடந்த தொழுவம்
பூமியின் ராஜாக்கள்
வணங்கச் சென்ற தொழுவம்
வானலோக சேனைகள்
வாழ்த்துப்பாடிய தொழுவம்
உடைந்துபோன உள்ளங்களின்
புகலிடமாம் தொழுவம்
மடிந்துபோன மானிடரின்
புதுவாழ்வாம் தொழுவம்
தொலைந்துபோன உள்ளங்களை
தேடிச்சேர்க்கும் தொழுவம்
வாழ்விழந்த மனிதருக்கு
வாழ்வுதரும் தொழுவம்
உலகை மீட்ட தேவனன்று அயர்ந்த தொழுவம்
கடவுள் அன்பின் வெளிப்பாடு அந்த தொழுவம்
பரலோகம் பூமியில் வந்த தொழுவம்
இயேசு ராஜன் வாசம் செய்த தொழுவம்
Comments
Post a Comment