விண்ணுலகின் மைந்தனாய்
விண்ணுலகின் மைந்தனாய் பூவுலகில் உதித்தவர்
மண்ணுலகில் விந்தையாய் ஏழைக் கோலம்
அணிந்தவர்
மண்மீது நித்தியமாய் –
இரட்சிப்பைத்
தந்தென்றும் வாழ்விக்கவே
உன்னதத்தில் மகிழ்ச்சி
மண்ணில் சமாதானம்
மானிடர் மேல் பிரியமே
பாவப்பாரம் தீர்ந்துபோக மாந்தரின்
வழியாய் – இந்த
பாவ வாழ்வு நீங்கிப் போக உலகத்தின்
வெளிச்சமாய்
அந்த சிலுவையின் ஆரம்பமாய்
தந்த மீட்பின் நற்செய்தியை
நாடி வந்தார் தேடி வந்தார்
தந்த மீட்பின் நற்செய்தியாய் ...
(உன்னதத்தில்...)
நித்தய வாழ்வை மனிதர் காண பரலோகின்
வாசலாய் - அவர்
பாதை சென்று வாழ்வைக் காண சத்திய
வழியாய்
அந்த சிலுவையின் ஆரம்பமாய்
நம் சத்திய வழியாய்
நாடி வந்தார் தேடி வந்தார்
நம் சத்திய வழியாய் ... (உன்னதத்தில்...)
Comments
Post a Comment