விண்ணுலகின் மைந்தனாய்

விண்ணுலகின் மைந்தனாய்  பூவுலகில் உதித்தவர்

மண்ணுலகில் விந்தையாய் ஏழைக் கோலம் அணிந்தவர்

மண்மீது நித்தியமாய் – இரட்சிப்பைத்

தந்தென்றும் வாழ்விக்கவே

 

உன்னதத்தில் மகிழ்ச்சி

மண்ணில் சமாதானம்

மானிடர் மேல் பிரியமே

 

பாவப்பாரம் தீர்ந்துபோக மாந்தரின் வழியாய் – இந்த

பாவ வாழ்வு நீங்கிப் போக உலகத்தின் வெளிச்சமாய்

அந்த சிலுவையின் ஆரம்பமாய்

தந்த மீட்பின் நற்செய்தியை

நாடி வந்தார் தேடி வந்தார்

தந்த மீட்பின் நற்செய்தியாய் ... (உன்னதத்தில்...)

 

நித்தய வாழ்வை மனிதர் காண பரலோகின் வாசலாய் - அவர்

பாதை சென்று வாழ்வைக் காண சத்திய வழியாய்

அந்த சிலுவையின் ஆரம்பமாய்

நம் சத்திய வழியாய்

நாடி வந்தார் தேடி வந்தார்

நம் சத்திய வழியாய்  ... (உன்னதத்தில்...)

Comments

Popular Posts