மாளிகையில்லை மாடடையிலே

 மாடடைக் குடிலினோரமே

நேசர் இயேசு வந்துதித்தாரே

தாழ்மையின் ரூபமாகவே

வல்ல இயேசு உலகில் வந்தாரே

 

இயேசு பிறந்தாரென்று மகிழ்ந்து கூடி நாம்

ஆடிப்பாடி செய்தி சொல்லுவோம்

பூவில் வந்தாரென்று மேன்மையை உணர்ந்து

சாட்சியாக என்றும் வாழுவோம்

 

மாளிகையில்லை மாடடையிலே

தாழ்மையாக வந்துதித்தாரே – இயேசு

 

கண்ணீரோடு கலங்கும் உன்னைத் தேற்ற வந்திட்டார்

நெஞ்சின் காயங்கள் எல்லாம் குணமாக்கிடுவார்

கதறும் உன் குரலைக் கேட்க வந்திட்டார்

தவறாமல் உனக்கு பதில் கொடுப்பார்

உன் குறைவுகள் எல்லாம் நிறைவாக்குவார்

உன் பாத்திரம் நிரம்பி வழியச்செய்வார்

 

பிரிவினை எல்லாம் நீக்க வந்திட்டார்

தோல்விகள் எல்லாம் ஜெயமாக்கிடுவார்

மகிழ்வான வாழ்வைத் தந்திடுவார்

வாக்கு மாறாமல் நடத்திடுவார்

உன் பாதை விலகாமல் காத்திடுவார்

உன்னை மீட்டிடவே அவர் உலகில் வந்தார்

Comments

Popular Posts